sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கோவை அரசு கல்லுாரியில் கலந்தாய்வு; இரண்டாம் பிரிவுக்கான தேதி அறிவிப்பு

/

கோவை அரசு கல்லுாரியில் கலந்தாய்வு; இரண்டாம் பிரிவுக்கான தேதி அறிவிப்பு

கோவை அரசு கல்லுாரியில் கலந்தாய்வு; இரண்டாம் பிரிவுக்கான தேதி அறிவிப்பு

கோவை அரசு கல்லுாரியில் கலந்தாய்வு; இரண்டாம் பிரிவுக்கான தேதி அறிவிப்பு


UPDATED : ஜூன் 07, 2025 12:00 AM

ADDED : ஜூன் 07, 2025 08:58 AM

Google News

UPDATED : ஜூன் 07, 2025 12:00 AM ADDED : ஜூன் 07, 2025 08:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
கோவை அரசு கலை கல்லுாரியின், முதலாமாண்டு மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வின் தொடர்ச்சியாக, 270- 240 வரை கட் ஆப் பெற்றவர்களுக்கு, இரண்டாம் பிரிவுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2, 3 தேதிகளில் சிறப்பு பிரிவு கலந்தாய்வும், 3, 4 தேதிகளில் பொதுக்கலந்தாய்வும் நடந்தது. தொடர்ந்து உள்ள காலியிடங்களுக்கான கலந்தாய்வுக்கு, கட்-ஆப் அடிப்படையில் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கல்லுாரி முதல்வர் எழிலி கூறியதாவது:


நடப்பாண்டில், 33, 753 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. கல்லுாரியில் முதலாமாண்டில் உள்ள, 1,727 இடங்களில் 947 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

தற்போது, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்கள் தவிர்த்து, 270 முதல் 299 கட் ஆப் பெற்றவர்கள், 9ம் தேதியும், 240 முதல் 269 வரை கட் ஆப் பெற்றவர்கள், 10ம் தேதியும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.

கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.பி.ஏ., மற்றும் அனைத்து வணிகவியல் பாடங்களிலும் இடங்கள் ஏதும் இல்லை. ஐ.டி., தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல், கணிதம், புவியியல், மண்ணியல், உளவியல், வரலாறு, பொது நிர்வாகவியல், பொருளாதாரம், சுற்றுலாத்துறை, பாதுகாப்பியல், அரசியல் அறிவியல் பிரிவுகளில் இடங்கள் உள்ளன. மொழி பாடங்களுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us