sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டெய்லி 200 தோப்புக்கரணம்; பள்ளியில் மயங்கிய 50 மாணவிகள்: இது ஆந்திரா ஸ்டைல்!

/

டெய்லி 200 தோப்புக்கரணம்; பள்ளியில் மயங்கிய 50 மாணவிகள்: இது ஆந்திரா ஸ்டைல்!

டெய்லி 200 தோப்புக்கரணம்; பள்ளியில் மயங்கிய 50 மாணவிகள்: இது ஆந்திரா ஸ்டைல்!

டெய்லி 200 தோப்புக்கரணம்; பள்ளியில் மயங்கிய 50 மாணவிகள்: இது ஆந்திரா ஸ்டைல்!


UPDATED : செப் 21, 2024 12:00 AM

ADDED : செப் 21, 2024 07:07 AM

Google News

UPDATED : செப் 21, 2024 12:00 AM ADDED : செப் 21, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்:
ஆந்திராவில் 200 முறை தோப்புக்கரணம் போடுமாறு மாணவிகளை பள்ளி முதல்வர் பாடாய்படுத்த, அவர்களில் 50 பேர் மயங்கி, சரிந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தண்டனை

பள்ளிகளில் மாணவர்கள் ஒழுங்காக படிக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் தண்டனை வழங்குவது வழக்கம். அவரவர் நோக்கங்களுக்கு ஏற்ப தண்டனைகளின் வடிவம் உருவம் பெறும். இந்நிலையில், ஆந்திர மாநிலம் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பள்ளியில் வழங்கப்பட்ட நூதன தண்டனை சர்ச்சையாகி இருக்கிறது.

தோப்புக்கரணம்

அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவிகள் ஒழுங்காக படிப்பதில்லை, உத்தரவுக்கு கீழ்படிய மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, பள்ளி முதல்வர் மாணவிகளை அழைத்து அவர்களுக்கு தண்டனை வழங்கி உள்ளார். அனைவரையும் 3 நாட்கள் தொடர்ந்து 200 முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என்பதே அது.

மயங்கினர்

தோப்புக்கரணம் போட, போட மாணவிகள் ஒவ்வொருவரின் உடல்நிலையும் மோசம் அடைந்தது. சிலர் கால்கள் வீங்கியபடி கதற அப்போதும் தண்டனையை நிறுத்த முதல்வர் உத்தரவிடவில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து மாணவிகள் தோப்புக்கரணம் போட்டதால் கிட்டத்தட்ட 50 மாணவிகள் அங்கேயே மயங்கி, சரிந்து விழுந்திருக்கின்றனர்.

மருத்துவமனை

இதைக்கண்டு அதிர்ந்த மற்ற ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு உள்ளூரில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். இந்த விவரம் அப்படியே பூதாகரமாக, ரம்பச்சோதவரம் எம்.எல்.ஏ., மிரியாலா ஸ்ரீசிரிஷ்யதேவிக்கு தகவல் பறந்திருக்கிறது.

மனித தன்மையில்லை


இதுகுறித்து அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், மாணவிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை மனித தன்மையற்ற செயல். ஒழுங்கீனம் என்பதற்காக இப்படி ஒரு தண்டனை அவசியம் இல்லை. போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.






      Dinamalar
      Follow us