10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழித்தேர்வு தேதி மாற்றம்
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழித்தேர்வு தேதி மாற்றம்
UPDATED : மார் 27, 2026 06:43 PM
ADDED : மார் 27, 2026 06:45 PM
பெங்களூரு:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 3வது மொழித் தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த, 18ம் தேதி துவங்கியது. ஏப்ரல் 2ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. இது வரை மூன்று தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. வரும், 30ம் தேதி மூன்றாவது மொழித்தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, மூன்றாவது மொழித்தேர்வுக்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெயாகி உள்ளது.
பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும், 30ம் தேதி நடக்கவிருந்த, 3வது மொழித்தேர்வு, வரும், 31ம் தேதி நடக்கும். மஹாவீர் ஜெயந்தி, 30ம் தேதிக்கு மாற்றப்பட்டதால், தேர்வு தேதியும் மாற்றப்பட்டு உள்ளது. அதே சமயம், மற்ற தேர்வுகளின் தேதிகளில் மாற்றம் இல்லை. மாணவர்கள் தேர்வு நாட்களில், அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

