sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டில்லி தமிழ்ச்சங்க 80ம் ஆண்டு மலர் வெளியீடு

/

டில்லி தமிழ்ச்சங்க 80ம் ஆண்டு மலர் வெளியீடு

டில்லி தமிழ்ச்சங்க 80ம் ஆண்டு மலர் வெளியீடு

டில்லி தமிழ்ச்சங்க 80ம் ஆண்டு மலர் வெளியீடு


UPDATED : ஏப் 15, 2025 12:00 AM

ADDED : ஏப் 15, 2025 11:37 PM

Google News

UPDATED : ஏப் 15, 2025 12:00 AM ADDED : ஏப் 15, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
டில்லி தமிழ்ச்சங்கத்தின் 80ம் ஆண்டு விழாவையொட்டி நேற்று சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

டில்லி தமிழ்ச்சங்கத்தின் 80ம் ஆண்டு விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி கர்நாடக இசை மற்றும் திரைப்பட பின்னணி பாடகி டாக்டர் சாருலதா மணி குழுவினரின் இசைப் பயணம் - இந்திய பாரம்பரிய இசையும், திரை இசையும் என்ற நிகழ்ச்சியும் மற்றும் டில்லி தமிழ்ச்சங்கத்தின் 80-வது ஆண்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழாவும் நேற்று டில்லி தமிழ்ச்சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

டில்லி தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலர் முகுந்தன், சிறப்பு விருந்தினர்களையும், கலைஞர்களையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில், தலைமை விருந்தினராக மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் பங்கேற்று, டில்லி தமிழ்ச்சங்கத்தின் 80வது ஆண்டு விழா மலரை வெளியிட, டில்லி போலீஸ் சிறப்பு கமிஷனர் கண்ணன் ஜெகதீசன் பெற்றுக் கொண்டார்.

அதன்பின் மத்திய இணையமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் பேசியதாவது:

தமிழ் மொழி மற்றும் கலாசாரம் மிகவும் பழமை மற்றும் பாரம்பரியம் கொண்டது. 1946ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட, டில்லி தமிழ்ச் சங்கம் மொழியைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலுடன், பாரதத்தின் பாரம்பரியம் மிக்க கலைகளைப் பாதுகாக்கும் பணியை செய்து வருவதோடு, 80ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us