sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மறுப்பு சரியே

/

துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மறுப்பு சரியே

துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மறுப்பு சரியே

துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மறுப்பு சரியே


UPDATED : ஜூன் 25, 2024 12:00 AM

ADDED : ஜூன் 25, 2024 06:43 AM

Google News

UPDATED : ஜூன் 25, 2024 12:00 AM ADDED : ஜூன் 25, 2024 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
கடந்த, 1988க்கு பின் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை ஊதியம் வழங்கும் வகையில், 2011ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையின் பலன்களை தங்களுக்கும் வழங்கக்கோரி, 1995க்கு பின் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மேலும், இதுதொடர்பாக தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அந்த அரசாணை பலன்களை வழங்க உத்தரவிட்டார். ஆனால், 1988 ஜூன் முதல் 1995 டிசம்பர் வரை துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணிபுரியவில்லை என்று கூறி, அவர்களின் கோரிக்கையை அரசு நிராகரித்தது.

இதை எதிர்த்து, 1995ம் ஆண்டு டிசம்பருக்கு பின் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று, தற்போது ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன் ஆஜராகி, 2988 முதல் 1995 வரை பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மட்டுமே, இந்த அரசாணை பொருந்தும்.

இந்த காலவரம்பு இல்லாமல், துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணப்பலன்கள் வழங்குவதாக இருந்தால், ஓய்வு பெற்ற துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 11,239 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் போது, அரசுக்கு 278 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்படும்.

இந்த வழக்கை பொறுத்தவரை, மேல்முறையீடுதாரர்கள் அனைவரும், 1995 டிசம்பருக்கு பின் பதவி உயர்வு பெற்று உள்ளனர். இதை கருத்தில் கொண்டே, மேல்முறையீடு தாரர்களின் கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளது என்றார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:


கடந்த 1995 டிசம்பருக்கு பின் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க முடியாது என்று காலவரம்பு நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.

இந்த காலவரம்புக்கு பின் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் பெற உரிமையில்லை. எனவே, 1995ம் ஆண்டுக்கு பின் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்க மறுத்த அரசு உத்தரவு செல்லும். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us