sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தினமலர் - நீட் மாதிரி தேர்வு விழுப்புரத்தில் நாளை நடக்கிறது

/

தினமலர் - நீட் மாதிரி தேர்வு விழுப்புரத்தில் நாளை நடக்கிறது

தினமலர் - நீட் மாதிரி தேர்வு விழுப்புரத்தில் நாளை நடக்கிறது

தினமலர் - நீட் மாதிரி தேர்வு விழுப்புரத்தில் நாளை நடக்கிறது


UPDATED : ஏப் 26, 2025 12:00 AM

ADDED : ஏப் 26, 2025 08:55 AM

Google News

UPDATED : ஏப் 26, 2025 12:00 AM ADDED : ஏப் 26, 2025 08:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:
தினமலர் நாளிதழ், சரஸ்வதி சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியோடு இணைந்து நடத்தும், நீட் மாதிரி தேர்வு வரும் 27ம் தேதி விழுப்புரத்தில் பிரம்மாண்டமாக நடக்கிறது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, வரும் மே 4ம் தேதி நாடு முழுதும் நடக்கிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் இத்தேர்வை எழுத தயாராகி வருகின்றனர்.

தமிழகம், புதுச்சேரியில் நீட் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் டாக்டர் கனவினை நிறைவேற்றிட தினமலர் நாளிதழ், சரஸ்வதி சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியோடு இணைந்து நீட் மாதிரி தேர்வை நடத்தவுள்ளது.

இந்த மாதிரி தேர்வு வரும் 27ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:20 மணி வரை, விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு மெயின் ரோடு, வி.பாளையத்தில் உள்ள சரஸ்வதி சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. மாதிரி தேர்வில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் 9524781197 என்ற மொபைல் எண்ணில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை தங்கள் பெயர், முழு விலாசம், மொபைல் எண் மற்றும் இ- மெயில் முகவரியை வாட்ஸ் ஆப்பில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி. ஆங்கிலம் மற்றும் தமிழில் வினாத்தாள் வழங்கப்படும். தேர்வுக்கான பதிவு எண் தங்களின் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.

இது மாதிரி நீட் தேர்வு என்றாலும், தேசிய தேர்வு முகமை நடத்தும் அசல் தேர்வு போன்றே நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே தேசிய தேர்வு முகமை விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்துமே தினமலர் - நீட் மாதிரி நுழைவு தேர்விலும் பின்பற்றப்பட உள்ளது. எனவே நீட் தேர்வில் பங்கேற்பதற்கான சிறந்த அனுபவத்தை 'தினமலர்' மாதிரி தேர்வில் பங்கேற்பதன் மூலம் பெற முடியும். காலை 9:45 மணிக்கு தேர்வு அறையில் இருக்க வேண்டும்.

தினமலர் - நீட் மாதிரி தேர்வு 3:20 மணி நேரம் இடைவிடாது ஆங்கிலம் மற்றும் தமிழில் நடக்கிறது. எனவே தேர்வு நேரம் முடியும் முன் வெளியே செல்ல அனுமதியில்லை.

அச்சம் போகும்


பொதுவாக நீட் தேர்வை கண்டு மாணவர்கள் மத்தியில் அச்சம் உள்ளது. பள்ளிகளில் நடைபெறும் தேர்வு என்பது பாடங்களை முழுமையாக படித்திருக்கிறார்களா என்று சோதிக்கும் வகையில் அமையும். ஆனால் நீட் நுழைவுதேர்வு என்பது பாடத் திட்டத்தை முழுதும் அறிந்து, புரிந்து வைத்திருக்கிறார்களா என்று சோதிக்கும் வகையில் இருக்கும்.

குறிப்பாக, பாடங்களின் கோட்பாடுகள், காரண காரியங்கள், பாடம் சார்ந்த ஆழமான அறிவு, பாடம் தொடர்பான பிரதியீடுகள் இவையெல்லாம் மாணவர்களுக்கு தெரிகிறதா என்று எடை போடுவது போல நீட் தேர்வு அமைந்திருக்கும்.

அதற்கேற்ப மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்வதன் மூலம் நீட் தேர்வில் அகில இந்தியாவில் டாப் ரேங்கில் வந்து சாதிக்கலாம். அதற்கு சிறந்த தளத்தினை தினமலர் நாளிதழ் மாதிரி தேர்வு மூலம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

அதுவும் நீட் தேர்விற்கு பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வரும் அனுபவம் வாய்ந்த சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, ஒவ்வொரு கேள்விகளும் வடிவமைக்கப்பட்டுள்ளதால், தேசிய தேர்வு முகமையில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்களுக்கு தினமலரின் நீட் மாதிரி தேர்வு தங்களை சுயமாக பரிசோதித்து கொள்ள அரிய வாய்ப்பு. எனவே இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us