UPDATED : மார் 23, 2026 02:53 AM
ADDED : மார் 23, 2026 02:53 PM

தொடக்கக் கல்வி பட்டய தேர்வுக்கான, தனி தேர்வர்கள் விண்ணப்பித்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின், அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில், தொடக்கக் கல்வி பட்டய தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பழனி கூறியதாவது:
தொடக்கக் கல்வி பட்டய தேர்வுக்கு, தனி தேர்வர்களாக தேர்வு எழுத இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
வரும், 26ம் தேதி முதல், ஏப்., 3 வரை தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, வேண்டிய ஆவணங்களை இணைத்து, தேர்வு கட்டணம் செலுத்தி, பயிற்சி நிறுவனத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இந்த தேதிகளில் விண்ணப்பிக்காத தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் ஏப்., 6, 7 ஆகிய, இரு தேதிகளில் விண்ணப்பிக்கலாம்
இவ்வாறு அவர் கூறினார்.

