sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மொபைல் போனில் இளைஞர்கள் வாழ்க்கையை தொலைத்து விடாதீர்

/

மொபைல் போனில் இளைஞர்கள் வாழ்க்கையை தொலைத்து விடாதீர்

மொபைல் போனில் இளைஞர்கள் வாழ்க்கையை தொலைத்து விடாதீர்

மொபைல் போனில் இளைஞர்கள் வாழ்க்கையை தொலைத்து விடாதீர்


UPDATED : மே 10, 2025 12:00 AM

ADDED : மே 10, 2025 10:15 AM

Google News

UPDATED : மே 10, 2025 12:00 AM ADDED : மே 10, 2025 10:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:
மொபைல் போனில் இளைஞர்கள் மூழ்கி, தங்களின் வாழ்க்கையை தொலைத்து விடாதீர், என, இந்திய முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரர் ராமன் விஜயன் பேசினார்.

காரமடை அருகே உள்ள ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரி சேர்மன் தர்மலிங்கம் தலைமை வகித்தார். தாளாளர் கார்த்திகேயன், துணை தாளாளர் அகிலேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இந்திய முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரர் ராமன் விஜயன் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசியதாவது:

கால்பந்து விளையாட்டு பயிற்சியகத்தில் சேர்ந்த போது, நான் இந்திய கால்பந்து விளையாட்டில் விளையாடுவேன் என கூறினேன். அதற்கு உடன் இருந்தவர்கள் கிண்டல் செய்தனர். விடாமுயற்சியும் தொடர்ந்து பயிற்சியும் பெற்று வந்ததால், இந்திய கால்பந்து அணியில் இடம் பெற்றேன். அதிக கோல் அடித்தவர்களில் நான் இரண்டாவது இடத்தில் உள்ளேன். எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். அதை வெளிக் கொண்டு வந்து, அதில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாடத்திட்டத்தையும் தாண்டி, விளையாட்டு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மொபைல் போனில் இளைஞர்கள் மூழ்கி, தங்களின் வாழ்க்கையை தொலைத்து விடாதீர். இவ்வாறு ராமன் விஜயன் பேசினார்.

ஒட்டுமொத்த கோப்பையை சோழன் அணி வென்றது. விழாவில் கல்லூரி செயலர் புனிதவள்ளி, துணை செயலர் வித்யா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us