sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இன்ஜி., சீட் விற்பனை வழக்கு 18 கல்லுாரிகளில் ஈ.டி., ரெய்டு

/

இன்ஜி., சீட் விற்பனை வழக்கு 18 கல்லுாரிகளில் ஈ.டி., ரெய்டு

இன்ஜி., சீட் விற்பனை வழக்கு 18 கல்லுாரிகளில் ஈ.டி., ரெய்டு

இன்ஜி., சீட் விற்பனை வழக்கு 18 கல்லுாரிகளில் ஈ.டி., ரெய்டு


UPDATED : ஜூன் 27, 2025 12:00 AM

ADDED : ஜூன் 27, 2025 07:02 PM

Google News

UPDATED : ஜூன் 27, 2025 12:00 AM ADDED : ஜூன் 27, 2025 07:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:
சி.இ.டி., எனும் பொது நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் இடம் கிடைப்பது இல்லை.

இந்த இடங்களை முடக்கி வைத்து லட்சக்கணக்கில் மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக, கடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி, பெங்களூரு மல்லேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் கர்நாடக தேர்வு ஆணைய நிர்வாகி இசலுதீன் புகார் செய்தார்.

இதுபற்றி மல்லேஸ்வரம் போலீசார் நடத்திய விசாரணையில், இன்ஜினியரிங் கல்லுாரியின் ஊழியர்கள், இடைத்தரகர்கள் இன்ஜினியரிங் இடங்களை முடக்கி வைத்து, தலா ஒரு இடத்தை 60 லட்சம் ரூபாய்க்கு விற்பது தெரியவந்தது.

இந்த முறைகேட்டில் ஈடுபட்ட கர்நாடக தேர்வு ஆணைய ஊழியர் ஹர்ஷா, 42, பிரகாஷ், 42, புனித், 27, சசிகுமார், 34, புருஷோத்தம், 24, அவினாஷ், 35, திலக், 60, ரவிசங்கர், 56, நவுசாத் ஆலம், 42, தில்ஷாத் ஆலம், 33, ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இன்ஜினியரிங் கல்லுாரிகளின் இணையதள பாஸ்வேர்டுகளை திருடி, அதன் மூலம், இன்ஜினியரிங் இடங்களை முடக்கியது தெரிந்தது.

இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அமலாக்கத்துறைக்கு, மல்லேஸ்வரம் போலீசார் கடிதம் எழுதினர். சில கல்லுாரி நிர்வாகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, மல்லேஸ்வரம் போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில், பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற பி.எம்.எஸ், ஆகாஷ் உட்பட 18 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், அமலாக்கத்துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர்.

காலை 6:00 மணிக்கு துவங்கிய சோதனை மாலை 6:00 மணி வரை நீடித்தது. கல்லுாரிகளின் நிர்வாக அலுவலகம் அறை உட்பட அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. முறைகேட்டில் கல்லுாரி நிர்வாகத்திற்கு தொடர்பு இருந்தால், அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பவும் வாய்ப்பு உள்ளது.






      Dinamalar
      Follow us