sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு ஊழியர் குழந்தைகள் கல்வி முன்பணம் உயர்வு

/

அரசு ஊழியர் குழந்தைகள் கல்வி முன்பணம் உயர்வு

அரசு ஊழியர் குழந்தைகள் கல்வி முன்பணம் உயர்வு

அரசு ஊழியர் குழந்தைகள் கல்வி முன்பணம் உயர்வு


UPDATED : ஜூலை 01, 2025 12:00 AM

ADDED : ஜூலை 01, 2025 08:51 AM

Google News

UPDATED : ஜூலை 01, 2025 12:00 AM ADDED : ஜூலை 01, 2025 08:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி கற்க, அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி முன்பணம், 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி கற்க, அரசு சார்பில், கல்வி முன்பணம் வழங்கப்படுகிறது. இதுவரை தொழிற்கல்வி பயில அதிகபட்சமாக 50,000 ரூபாய்; கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிக்க, 25,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.

இனி, தொழிற்கல்விக்கு 1 லட்சம் ரூபாய்; கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிக்க, 50,000 ரூபாய் வழங்கப்படும் என, சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதை செயல்படுத்த, தமிழக நிதித்துறை சார்பில், அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. நடப்பாண்டு முதல் இது செயல்பாட்டிற்கு வரும்.






      Dinamalar
      Follow us