sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் முட்டை

/

பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் முட்டை

பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் முட்டை

பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் முட்டை


UPDATED : ஜூலை 23, 2024 12:00 AM

ADDED : ஜூலை 23, 2024 10:47 AM

Google News

UPDATED : ஜூலை 23, 2024 12:00 AM ADDED : ஜூலை 23, 2024 10:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:
பெங்களூரில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் முட்டை வழங்கும் திட்டத்தை முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.

பின் அவர் பேசியதாவது:


குழந்தைகள் காலை உணவு இல்லாமல் பள்ளிக்கு வருவதையும், மதிய உணவு இல்லாமல் மதியம் வரை பள்ளியில் இருப்பதையும் பார்த்திருக்கிறேன். இதனால் வாரம் இருமுறை உணவும், முட்டையும் கொடுக்க ஆரம்பித்தோம்.

இப்போது அஜிம் பிரேம்ஜி அறக்கட்டளை, அரசுடன் இணைந்து, வாரத்தில் ஆறு நாட்கள் முட்டைகள் வழங்க உள்ளது. குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவு அவசியம். ஏழைகளின் குழந்தைகளுக்கும் சிறந்த கல்விக்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். அதிகளவில் உறைவிடப்பள்ளிகளை திறந்து வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், விப்ரோ நிறுவன தலைவர் அஜிம் பிரேம்ஜி, துவக்க கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா உட்பட பலர் பங்கேற்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் முட்டை வழங்கும் திட்டத்தை, முதல்வர் சித்தராமையா துவக்கிவைத்தார்.






      Dinamalar
      Follow us