அரசு முகாமுக்கு பள்ளி வகுப்பறைகள் ஆக்கிரமிப்பு: பா.ஜ.,
அரசு முகாமுக்கு பள்ளி வகுப்பறைகள் ஆக்கிரமிப்பு: பா.ஜ.,
UPDATED : ஆக 07, 2025 12:00 AM
ADDED : ஆக 07, 2025 09:25 AM
சென்னை:
மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில், அரசின் முகாம்களை விடுமுறை நாட்களில் நடத்த வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் இயங்கி வரும் அரசு நடுநிலை பள்ளியில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்காக வகுப்பறைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இதனால், கொளுத்தும் வெயிலில் மரத்தடி மணலில் அமர்ந்து, படிக்கும் அவலம் அரங்கேறி உள்ளது.
மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில், அரசின் முகாம்களை விடுமுறை நாட்களில் வைக்க வேண்டும் என்ற அடிப்படையை கூட அறியாத அரசின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. இதில், பள்ளி நிர்வாகத்தின் மீது உடனே நடவடிக்கை எடுப்பதுடன், இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல், அரசு தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

