தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கம்

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கம்

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கம்


UPDATED : மார் 30, 2026 06:28 PM

ADDED : மார் 30, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 30, 2026 06:28 PM ADDED : மார் 30, 2026 06:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லுாரியில் தேசிய தொழில் முனைவோர் வளர்ச்சி மையம் சார்பில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

கள்ளக்குறிச்சி வளாகம் காமராஜர் அரங்கில் நடந்த கருத்தரங்கிற்கு கல்லுாரி நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர், டீன் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். கணினி அறிவியல் துறை பேராசிரியர் சந்திரபிரியா வாழ்த்துரை வழங்கினார்.

தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன மூத்த திட்ட அலுவலர் விக்னேஷ் தனசெல்வன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு தொழில் முனைவு திறன், சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் அரசு உதவி திட்டங்கள் குறித்து விளக்கினார். மாணவர்கள் தங்களின் சந்தேகங்கள் குறித்து விளக்கம் பெற்று மகிழ்ந்தனர். கணினி அறிவியல் துறை தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us