UPDATED : ஜூலை 14, 2026 05:35 PM
ADDED : ஜூலை 14, 2026 05:37 PM
அ நிறம் | அளவு
பல்லடம்:
பல்லடம் அரசு கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுகப் பயிற்சி நிகழ்ச்சி, கல்லுாரி முதல்வர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி முன்னாள் முதல்வர் சண்முகசுந்தரம் பேசுகையில், உயர்கல்வியுடன் டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் திட்டமிட்டு தயாராக வேண்டும்.
ஜூனியர் அசிஸ்டென்டாக அரசு பணியில் சேர்ந்தாலும், படிப்படியாக பதவி உயர்வு பெற்று உயர்ந்த நிலையை அடையலாம். வாழ்க்கையில் வெற்றி பெற ஒவ்வொரு படியையும் திட்டமிட்டு ஏற வேண்டும் என்றார்.
பேராசிரியர்கள் டேவிட் சவுந்தரராஜன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
