sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அதிவேக வாகனங்களால் அச்சம்; பள்ளி மாணவர்கள் திணறல்

/

அதிவேக வாகனங்களால் அச்சம்; பள்ளி மாணவர்கள் திணறல்

அதிவேக வாகனங்களால் அச்சம்; பள்ளி மாணவர்கள் திணறல்

அதிவேக வாகனங்களால் அச்சம்; பள்ளி மாணவர்கள் திணறல்


UPDATED : ஜூன் 19, 2024 12:00 AM

ADDED : ஜூன் 19, 2024 09:42 AM

Google News

UPDATED : ஜூன் 19, 2024 12:00 AM ADDED : ஜூன் 19, 2024 09:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு அருகே, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே, எச்சரிக்கை சிக்னல் அமைக்க வேண்டுமென, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் பள்ளியில் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர். கிணத்துக்கடவு பகுதியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்கள், ஆபத்தை உணராமல் யு டர்ன் பகுதியில் இருந்து ஒன் வே வழியாகவே வருகின்றனர்.

அரசு பஸ்சில் வரும் மாணவர்கள் பள்ளி எதிரே உள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கி, ரோட்டை கடந்து செல்கின்றனர். அதிக வேகமாக வாகனங்கள் வரும் போது, மாணவர்கள் வேகமாக ஓடுகின்றனர். மேலும், இங்கு உள்ள சென்டர் மீடியனை கடந்து செல்ல இப்பகுதியில் மட்டும் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்களும், மாணவர்களும் ஆபத்தை உணராமல் தினம் தோறும் இப்படி சென்று வருகின்றனர். பள்ளி அருகே ரோடு தாழ்வாக உள்ளதால் வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது.

எனவே, பள்ளி மாணவர்கள் நலன் கருதி, பள்ளி நேரத்தில், பாதுகாவலர்களை நியமித்து, மாணவர்கள் ரோட்டை கடக்க உதவ வேண்டும். வாகனங்கள் மெதுவாக வரும் வகையில், எச்சரிக்கை சிக்னல் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us