இலவச சேர்க்கைக்கு சிபாரிசு கூடாது: தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு
இலவச சேர்க்கைக்கு சிபாரிசு கூடாது: தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு
UPDATED : மே 23, 2024 12:00 AM
ADDED : மே 23, 2024 01:38 PM

சென்னை:
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து சுயநிதி பள்ளிகளிலும், நுழைவு நிலையான எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்கள், அரசால் நிரப்பப்படுகின்றன.
இந்த இடங்களில் சேரும் மாணவர்களுக்கு, 8ம் வகுப்பு வரையிலான கல்விக் கட்டணத்தை, பள்ளிகளுக்கு அரசே வழங்கும். இதன்படி, வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஏப்ரல், 22 முதல் இம்மாதம், 20ம் தேதி வரை ஆன்லைன் வழி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 1.30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால், அதை குலுக்கல் முறையில் மட்டுமே, ஒதுக்கீடு செய்ய வேண்டும்; மாறாக சிபாரிசு அடிப்படையில் ஒதுக்கக் கூடாது என, பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.