sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு

இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு

இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு


UPDATED : ஆக 01, 2025 12:00 AM

ADDED : ஆக 01, 2025 08:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2025 12:00 AM ADDED : ஆக 01, 2025 08:54 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், தமிழகம் முழுவதும் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், காங்கயம், உடுமலை ஆகிய மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் தலா மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் மூலம், திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி; சென்னிமலையில் உள்ள பொது நுாலகம்; உடுமலை, தளி ரோட்டிலுள்ள கிளை நுாலகம் ஆகியவற்றில், திருக்குறள் பயிற்சி வகுப்புகள், ஆக., இரண்டாவது வாரம் முதல் நடைபெற உள்ளன.

முற்றிலும் இலவசமான இப்பயிற்சி வகுப்புகள், வாரந்தோறும் சனிக்கிழமை, மதியம், 2:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை நடைபெறும். ஆண்டுக்கு 30 வகுப்புகள் நடத்தப்பட்டு, பயிற்சி முடித்தவர்களுக்கு பங்கேற்புச் சான்று வழங்கப்படும்.

பங்கேற்க விரும்புவோர், சுய விவரத்துடன், ஆதார் நகல் இணைத்து, ddtamil607@gmail.com என்கிற இ-மெயிலிலும்; கலெக்டர் அலுவலக வளாகம், அறை எண்: 608ல் இயங்கும் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அலுவலகத்துக்கு தபாலிலும் அனுப்பிவைக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, 93614 61882, 87606 06234 என்கிற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us