UPDATED : ஏப் 11, 2025 12:00 AM
ADDED : ஏப் 11, 2025 08:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:
மருத்துவ பணியாளர் தேர்வாணையம் சார்பில், 425 மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப, கடந்த மார்ச், 10 வரை விண்ணப்பம் பெறப்பட்டது. விரைவில் எழுத்துத்தேர்வு நாள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் அப்போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு, சேலம், கோரிமேடு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.
மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் மணி பேசுகையில், சனிதோறும் காலை, 10:00 முதல், மாலை, 4:00 மணி வரை பயிற்சி வகுப்பு நடத்தி, சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்படும். தேர்வு நாள் அறிவிப்புக்கு பின், பயிற்சி வகுப்பு நேரம், தேவைக்கு ஏற்ப அதிகரிக்கப்படும் என்றார்.
நடப்பு தேர்வுக்கு பதிவு பெற்ற, 142 பேரில், 49 பேர் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர்.

