sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பழங்குடி மொழிகளைப் பாதுகாக்க நிதி

/

பழங்குடி மொழிகளைப் பாதுகாக்க நிதி

பழங்குடி மொழிகளைப் பாதுகாக்க நிதி

பழங்குடி மொழிகளைப் பாதுகாக்க நிதி


UPDATED : ஆக 09, 2024 12:00 AM

ADDED : ஆக 09, 2024 10:14 AM

Google News

UPDATED : ஆக 09, 2024 12:00 AM ADDED : ஆக 09, 2024 10:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
பழங்குடி மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மத்திய அரசின் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம், நிதி உதவி வழங்குகிறது.

பழங்குடி மொழிகளில் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடக்கப்பள்ளி பாடத்திட்டம் தயாரித்தல், பழங்குடி மொழிகளில் கதைகளை வெளியிடுதல், பழங்குடியின இலக்கியத்தை மேம்படுத்துதல், பல்வேறு பழங்குடி மொழிகள் குறித்த புத்தகங்கள், இதழ்களை வெளியிடுதல், பல்வேறு பழங்குடியினரின் நாட்டுப்புறக் கதைகளை ஆவணப்படுத்துதல், ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பழங்குடி பாடல்கள், விடுகதைகள், கதைப்பாடல்கள் போன்ற வாய்மொழி இலக்கியங்களைச் சேகரித்தல், நோய் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மாநாடுகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள், கவிதைக் கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்துதல் ஆகியவையும் நடத்தப்படுகின்றன.

மேலும், புதிய கல்விக் கொள்கையில், குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் விரைவாக கற்றுக் கொள்ள வேண்டும். அதன்படி, கல்வியை வழங்குவதற்கும், மொழியைப் பாதுகாப்பதற்கும் மத்திய, மாநில அரசுகள் பன்மொழிக் கொள்கையை ஊக்குவித்து வருகின்றன. கல்வி அமைச்சகம் தெரிவித்தபடி, மைசூருவில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனத்தின் (சிஐஐஎல்) கீழ் 2013 ஆம் ஆண்டில் அமைச்சகம் மொழிகளின் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கியது.

10,000க்கும் குறைவான மக்களால் பேசப்படும் இந்தியாவின் தாய்மொழிகளை இந்த வகையில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கு பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஆதரவளித்தல் திட்டத்தின் கீழ், திட்டங்கள் / செயல்பாடுகளுக்கு உயர்மட்டக் குழு ஒப்புதல் அளிக்கிறது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை இணையமைச்சர் துர்காதாஸ் உய்கே இதனைத் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us