UPDATED : ஜூலை 03, 2026 06:30 PM
ADDED : ஜூலை 03, 2026 06:31 PM
ஈரோடு:
கோபி பெரிய கொடிவேரி, ஈரோடு காசிபாளையத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,களில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள், 14 முதல், 40 வயது வரையும், பெண்களுக்கு வயது வரம்பு இன்றி விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு, அதற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்கள், 2 ஆண்டு கால பயிற்சி பிரிவுகளான எலக்ட்ரீஷியன், பிட்டர், மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள், ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர்கன்டிஷனிங் உட்பட பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியில் சேரும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு கட்டணமில்லா பயிற்சி, இலவச தங்கும் விடுதி, மாதம், 750 ரூபாய் உதவித்தொகை, தமிழ் புதல்வன் அல்லது புதுமைப்பெண் திட்டத்தில் மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை, இலவச சைக்கிள், பஸ் பாஸ் வழங்கப்படும்.
