UPDATED : ஜூலை 24, 2026 08:09 PM
ADDED : ஜூலை 24, 2026 08:10 PM
பெ.நா.பாளையம்:
கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பயன்பெற ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது.
மாணவர்களின் அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல், சிக்கல்களுக்கு தீர்வு காணும் திறன், தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள், அறிவியல் தொழில்நுட்பம், இன்ஜினியரிங், கணிதம் ஆகிய துறைகளில் செயல்வழி கற்றலை பெறும் வகையில், நவீன உபகரணங்களுடன் இந்த ஸ்டேம் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மாணவர்களின் புதுமை சிந்தனை, ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் கண்டுபிடிப்பு திறன் வளர்ச்சி அடையும்.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் விக்னேஸ்வரி தலைமை வகித்தார். போத்தீஸ் நிறுவன துணை தலைவர் சத்யநாராயணன், ரோட்டரி மாவட்ட ஆளுநர் செல்லா ராகவேந்திரன், ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் தேவதாஸ், தற்போதைய தலைவர் சந்திரசேகர், சார்ப் டூல்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
