sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

போஸ்ட் ஆபீசில் சேமிப்பு கணக்கு துவக்கம் அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வம்

/

போஸ்ட் ஆபீசில் சேமிப்பு கணக்கு துவக்கம் அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வம்

போஸ்ட் ஆபீசில் சேமிப்பு கணக்கு துவக்கம் அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வம்

போஸ்ட் ஆபீசில் சேமிப்பு கணக்கு துவக்கம் அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வம்


UPDATED : நவ 16, 2024 12:00 AM

ADDED : நவ 16, 2024 10:47 AM

Google News

UPDATED : நவ 16, 2024 12:00 AM ADDED : நவ 16, 2024 10:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை:
வால்பாறையில் உள்ள, போஸ்ட் ஆபீசில் புதிய கணக்கு துவங்க, அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வால்பாறை போஸ்ட் ஆபீசில் பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக, சுகன்யா சம்ரிதி எனும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை, கடந்த, 2015ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

பெண் குழந்தைகள் பெயரில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு துவங்கலாம். இது தவிர, பள்ளி மாணவர்கள் நலன் கருதி பெற்றோர் போஸ்ட் ஆபீசில் சிறுசேமிப்பு துவங்கியுள்ளனர்.

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற வசதியாக, போஸ்ட் ஆபீசில் மாணவர்கள் நேரடியாக சென்று, சேமிப்பு கணக்கை துவங்கியுள்ளனர். வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று வால்பாறை போஸ்ட் ஆபீசில் புதிய சேமிப்பு கணக்கு துவங்கினர்.

வால்பாறை போஸ்ட் மாஸ்டர் கீதாஞ்சலி கூறியதாவது:


பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினிபேகம், கோட்ட ஆய்வாளர் வெங்கட் ஆகியோர் உத்தரவின் பேரில், பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை எளிதில் பெற வசதியாக, போஸ்ட் ஆபீசில் சிறுசேமிப்பு கணக்கு துவங்கப்பட்டுள்ளது.

வால்பாறை மலைப்பகுதியில் உள்ள அனைத்துபள்ளி மாணவர்களும், சிறுசேமிப்பு கணக்கு துவங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். வால்பாறை போஸ்ட் ஆபீசில் மட்டும், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை பெற சேமிப்பு கணக்கு துவங்கியுள்ளனர்.

இது தவிர, செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், பெண்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், இன்சூரன்ஸ், டெபாசிட், சிறுசேமிப்பு உள்ளிட்ட கணக்குகளை துவங்க வாடிக்கையாளர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வால்பாறை போஸ்ட் ஆபீசில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், 500 ரூபாய் செலுத்தி புதிய கணக்கு துவங்கினால், அவர்களுக்கு, ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுகிறது.

இவ்வாறு, கூறினார்.






      Dinamalar
      Follow us