sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பழைய தகவல்களை கூறும் அரசு பள்ளி சுவர்கள் : மாணவர்கள் பாதிப்பு

/

பழைய தகவல்களை கூறும் அரசு பள்ளி சுவர்கள் : மாணவர்கள் பாதிப்பு

பழைய தகவல்களை கூறும் அரசு பள்ளி சுவர்கள் : மாணவர்கள் பாதிப்பு

பழைய தகவல்களை கூறும் அரசு பள்ளி சுவர்கள் : மாணவர்கள் பாதிப்பு


UPDATED : செப் 19, 2025 12:00 AM

ADDED : செப் 19, 2025 09:20 AM

Google News

UPDATED : செப் 19, 2025 12:00 AM ADDED : செப் 19, 2025 09:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எரியோடு :
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் எளிதாக பல புதிய விஷயங்களை கற்க வேண்டும் என நோக்கில் வரையப்பட்டுள்ள இந்திய, மாநில வரைப்படங்கள் இன்னமும் பல அரசு பள்ளிகளில் பழைய தகவல்களுடனும், தெளிவற்ற முறையிலும் இருப்பதால் மாணவர்கள் பாதிக்கின்றனர்.

ஒரு குழந்தையின் கற்கும் திறன் அங்கன்வாடி மையங்களில் துவங்கி பிரி கே.ஜி, எல்.கே.ஜி., யூ.கே.ஜி, என மழலையர் கல்விக்கு பின்னர் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை துவக்க பள்ளியிலும், 6ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை நடுநிலைப்பள்ளியிலும், 9, 10ம் வகுப்புகளான உயர்நிலைப் பள்ளிகளிலும், 11,12ம் வகுப்புகளான மேல்நிலைப்பள்ளியிலும் படிப்படியாக அதிகரிக்கிறது. இதற்கு மேலும் இளங்கலை, முதுகலை என படிப்பு வாய்ப்புகள் நிறைய உள்ளது. கற்றது கை மண் அளவு கல்லாதது கடலளவு என்ற பழமொழி கூற்றை போல் அவ்வளவு படிப்புகள் உள்ளது. உயர்நிலைக்கு பின்னர் மாணவர்கள் தங்களது துறையை தேர்ந்தெடுக்க வசதியாக பாடப்பிரிவுகளாக மாறிவிடுகிறது. இவை எல்லாம் சிறப்பாக அமைய வேண்டுமெனில் ஆரம்ப கல்வி நன்றாக இருக்க வேண்டும் என்பது நன்கு கற்று தேர்ந்த கல்வியாளர்களின் அறிவுரையாகும்.

ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான அரசு பள்ளி சுவர்களில் வரையப்பட்டுள்ள இந்தியா, தமிழ்நாடு வரை படங்கள் தெளிவற்றதாகவும், தற்போதைய நிலவரத்தை கூறாமல் பழைய தகவல்களை தெரிவிக்கின்றனர். இதனால் துவக்கப்பள்ளி பருவத்தில் இருந்து படிப்படியாக திறன் மிக்க,தெளிவான மாணவர்களாக மாறும் பருவத்தில் இருப்போருக்கு சரியான தகவல்களை தெரிவிக்காமல் வரைப்படங்கள் இருப்பது கல்வித்துறையின் பலவீனத்தை காட்டுகிறது. பல அரசு பள்ளிகளில் தமிழ்நாடு நிலப்பரப்பில் இருக்கும் புதுச்சேரி குறித்த தகவல் இல்லை. பக்கத்து மாநிலமான தெலுங்கானா பிரிக்கப்பட்டது குறித்த தகவல் இல்லை. தமிழ்நாட்டிற்குள் பிரிக்கப்பட்ட பல புதிய மாவட்டங்கள் குறித்த தகவல் இல்லை. இவற்றை அவ்வப்போது புதுப்பிக்க முடியாது என்றால் இதுபோன்ற வரைப்படங்களை அரசு பள்ளிச்சுவர்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே ஆசிரியர்களின் கருத்தாக உள்ளது.

எப்படி முன்னேற முடியும்

இது குறித்து எரியோடு அம்பலகாரர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கருப்புசாமி கூறுகையில், பல லட்ச ரூபாய்களை செலவிட்டு நகரங்களில் இருக்கும் தனியார் பள்ளிகளுக்கு தங்களது குழந்தைகளை அனுப்புவதற்கு பொருளாதாரம் ஒத்துழைப்பு தராத நிலையில் மக்கள், தங்கள் பகுதியில் இருக்கும் அரசு பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். அதற்காக இப்படி தவறான தகவல்களுடன் ஆண்டுக்கணக்கில் வரைப்படங்களை அப்படி விட்டு வைத்திருந்தால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எப்படி போட்டி உலகில் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு முன்னேற முடியும். அரசு பள்ளிகளில் இருக்கும் வரைப்படங்களில் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப ஆண்டுதோறும் கண்காணித்து புதிய தகவல்களை இடம் பெற செய்ய வேண்டும். இதுசிரமமான காரியம் என்றால் வரைப்படங்களை புத்தகங்களுடன் நிறுத்தி கொள்வது சிறப்பாகும். பள்ளி சுவர் வரைப்படங்கள் மூலம் தவறான, தெளிவற்ற தகவல்கள் மாணவர்களுக்கு சென்றடைவதை அரசு தடுக்க வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us