sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவர்களிடம் சிக்கிய ரூ.3.5 கோடி ஹவாலா பணம்

/

மாணவர்களிடம் சிக்கிய ரூ.3.5 கோடி ஹவாலா பணம்

மாணவர்களிடம் சிக்கிய ரூ.3.5 கோடி ஹவாலா பணம்

மாணவர்களிடம் சிக்கிய ரூ.3.5 கோடி ஹவாலா பணம்


UPDATED : பிப் 27, 2025 12:00 AM

ADDED : பிப் 27, 2025 04:21 PM

Google News

UPDATED : பிப் 27, 2025 12:00 AM ADDED : பிப் 27, 2025 04:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புனே:
மஹாராஷ்டிராவின் புனே விமான நிலையத்திற்கு, கடந்த வாரம் மேற்காசிய நாடான துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த மூன்று மாணவர்களின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, அவர்கள் வைத்திருந்த புத்தகங்களுக்கு இடையே 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் இருந்ததை கண்டறிந்து, பறிமுதல் செய்தனர். இதன் இந்திய மதிப்பு, 3.5 கோடி ரூபாய்.

மாணவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், புனேவைச் சேர்ந்த டிராவல் ஏஜன்ட் குஷ்பு அகர்வால் ஏற்பாட்டின்படி மூன்று மாணவர்களும் துபாய்க்கு கடந்த வாரம் சுற்றுலா சென்றது தெரியவந்தது.

இவர்கள் மூவரும் நாடு திரும்பும்முன், முக்கிய அலுவலக கோப்புகள் அடங்கிய பைகளை துபாயில் இருந்து எடுத்துவரும்படி குஷ்பு அகர்வால் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து, இரண்டு டிராலி பைகளுடன் புனே விமான நிலையத்திற்கு வந்தபோது, சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டனர். குஷ்பு அகர்வாலிடம் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us