sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும் உதவி

/

பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும் உதவி

பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும் உதவி

பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும் உதவி


UPDATED : டிச 10, 2025 07:50 AM

ADDED : டிச 10, 2025 07:52 AM

Google News

UPDATED : டிச 10, 2025 07:50 AM ADDED : டிச 10, 2025 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன், உடல்நலக் குறைவால் நவம்பர் 14ம் தேதி காலமானார். அவரது மனைவி வசந்தி, 2017ல் உயிரிழந்து விட்டார்.

இவர்களுக்கு மூன்று பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். பெற்றோரை இழந்த நான்கு பேரையும், சமீபத்தில் தொலைபேசி வாயிலாக அழைத்து, முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

அதன்படி, கமலக்கண்ணன் மகள் லாவண்யாவிற்கு, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு மனை பட்டா, வீடு கட்டுவதற்கு 3.55 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டு ஆணைகளை, முதல்வர் வழங்கினார்.

சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கணினி உதவியாளர் பணிக்கான நியமன ஆணையையும் வழங்கினார். மற்றொரு மகள் ரிஷிகா மற்றும் சிறுவன் அபினேஷ் ஆகியோருக்கு, அன்புகரங்கள் திட்டத்தின் கீழ், மாதம் தலா 2,000 ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும் வழங்கினார்.

மற்றொரு மகள் ரீனாவுக்கு, அழகு கலை பயிற்சி பெறுவதற்கு, 6,000 ரூபாய் உதவித் தொகையையும் முதல்வர் வழங்கினார்.






      Dinamalar
      Follow us