sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு பள்ளிகளில் மாணவர் பாதுகாப்புக்கு குழு: உயர்நீதிமன்றம் உத்தரவு

/

அரசு பள்ளிகளில் மாணவர் பாதுகாப்புக்கு குழு: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு பள்ளிகளில் மாணவர் பாதுகாப்புக்கு குழு: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு பள்ளிகளில் மாணவர் பாதுகாப்புக்கு குழு: உயர்நீதிமன்றம் உத்தரவு


UPDATED : ஜூன் 07, 2025 12:00 AM

ADDED : ஜூன் 07, 2025 03:03 AM

Google News

UPDATED : ஜூன் 07, 2025 12:00 AM ADDED : ஜூன் 07, 2025 03:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
தமிழகத்தில் 11 மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தேனி மாவட்டம் ஸ்ரீரங்கபுரம் வழக்கறிஞர் ஷப்னா தாக்கல் செய்த பொதுநல மனு:

பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து மாணவர்களை பாதுகாக்க தலைமையாசிரியர்கள் தலைமையில் ஆசிரியர், பெற்றோர், ஆசிரியரல்லாத ஊழியர், பள்ளி நிர்வாக பிரதிநிதியை கொண்ட பாதுகாப்பு மற்றும் ஆலோசனைக் குழுக்களை அமைக்க தமிழக அரசு 2021 ல் அரசாணை வெளியிட்டது. இதன்படி போக்சோ சட்டம் குறித்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதை சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை.

2021-22ல் குழுக்கள் அமைக்கப்பட்டாலும் மீண்டும் அவ்வப்போது மறு சீரமைப்பு செய்வதில்லை. குழுக்கள் சரியாக செயல்படுவதில்லை. சில பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன. அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் ஆலோசனைக் குழுக்களை அமைக்க வலியுறுத்தி தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர், இயக்குனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.

தமிழக அரசு தரப்பு:

மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, மயிலாடு துறை, கோவை, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்துார் மாவட்டங்களில் 11 ஆயிரத்து 820 அரசு பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் ஆலோசனைக் குழுக்கள் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளன. போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடந்துள்ளன. பிற மாவட்டங்களில் விபரங்கள் சேகரிக்க அவகாசம் தேவை. இவ்வாறு தெரிவித்தது.

நீதிபதிகள்: எங்கெங்கு குழு அமைக்கவில்லை என்ற விபரங்களை சேகரிக்க வேண்டும். அரசாணைப்படி பிற மாவட்டங்களில் குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் ஆக.5 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us