எஸ்.வி., அரசு மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி
எஸ்.வி., அரசு மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி
UPDATED : ஜன 29, 2026 01:30 PM
ADDED : ஜன 29, 2026 01:32 PM
சங்கராபுரம்: எஸ்.வி., அரசு மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வியே எங்கள் இலக்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சங்கராபுரம் அடுத்த எஸ்.வி., அரசு மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் மூலம் பிளஸ் 1 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு, உயர்கல்வியே எங்கள் இலக்கு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமை தாங்கி உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் இளையராஜா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து பேசினார். மாணவ, மாணவிகளுக்கு வினாடி வினா நடத்தப்பட்டது.
உயர்கல்வி கனவுச்சுவர் ஏற்படுத்தப்பட்டு, அதில் மாணவர்களின் எதிர்கால எண்ணங்கள், கனவுகள் குறித்து எழுதினர். அதைத் தொடர்ந்து, உயர்கல்வி கண்காட்சி நடந்தது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனசேகரன், சசிகலா, லோகநாராயணன் செய்திருந்தனர். ஆசிரியர் சின்னதுரை நன்றி கூறினார்.

