sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஐஐடி மாணவர்கள் புதுமைக் கண்டுபிடிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: தர்மேந்திர பிரதான்

/

ஐஐடி மாணவர்கள் புதுமைக் கண்டுபிடிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: தர்மேந்திர பிரதான்

ஐஐடி மாணவர்கள் புதுமைக் கண்டுபிடிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: தர்மேந்திர பிரதான்

ஐஐடி மாணவர்கள் புதுமைக் கண்டுபிடிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: தர்மேந்திர பிரதான்


UPDATED : ஆக 18, 2025 12:00 AM

ADDED : ஆக 18, 2025 08:49 AM

Google News

UPDATED : ஆக 18, 2025 12:00 AM ADDED : ஆக 18, 2025 08:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் நேற்று இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), டில்லி வளாகத்துக்குச் சென்று மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வில் உயர்கல்வித் துறை செயலாளர் டாக்டர் வினீத் ஜோஷி, டில்லி ஐஐடி இயக்குநர் பேராசிரியர் ரங்கன் பானர்ஜி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர், இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி தன்னம்பிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் தொலைநோக்கு இலக்கை அடைய, தற்போதைய தருணம் தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது, என்றார்.

மாணவர்களின் கனவுகள், ஆராய்ச்சிகள், தொழில்நுட்ப சவால்கள் குறித்து கருத்துகளை பகிர்ந்துகொண்ட அமைச்சர், திறன் மேம்பாடு மற்றும் புதுமை உணர்வை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், புதுமையான யோசனைகளை முன்வைத்து, சவால்களை எதிர்கொண்டு, ஒவ்வொரு துறையிலும் தற்சார்பு நோக்கை எட்ட மாணவர்கள் பாடுபட வேண்டும். அதிக அளவில் புதுமைக் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும், என்று மாணவர்களை ஊக்குவித்தார்.

இந்தியாவை உலகளாவிய தீர்வுகளின் மையமாக மாற்றவும், வருங்கால தலைமுறைக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கவும் அரசு கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்களுடன் தோளோடு தோள் நிற்கிறது, என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us