UPDATED : டிச 16, 2025 10:07 AM
ADDED : டிச 16, 2025 10:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில், 15 வயதுக்கும் மேற்பட்ட எழுத்தறிவு பெற்றவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கும் வகையில், 2025-26ம் ஆண்டில் இரண்டாம் கட்டமாக, 38,572 பேர் கண்டறியப்பட்டனர்.
இவர்கள் 1,521 மையங்களில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு அந்தந்த மையங்களில் நேற்று நடந்தது. மாவட்டத்தில் உள்ள, 14 யூனியன்களிலும் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெறுவோர் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு சான்றிதழ் வழங்கப்படும்.

