UPDATED : ஏப் 09, 2026 12:50 PM
ADDED : ஏப் 09, 2026 12:52 PM
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி சூர்யா கல்tலூரியில் மாணவர்களுக்கான நான்காவது பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
சூர்யா இன்ஜினியரிங் கல்லுாரியில் கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் இணைய பாதுகாப்பு துறை சார்பில் நடந்த தேசிய கருத்தரங்கிற்கு கல்வி குழும நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்று துவக்கி வைத்து பேசினார். முன்னதாக துறை தலைவர் நித்யா வரவேற்றார்.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை பேராசிரியர் சத்தியமூர்த்தி பங்கேற்று மாணவர்களிடையே பிளாக் செயின் தொழில்நுட்ப அறிவியல் குறித்தும் எதிர்கால வேலை வாய்ப்பு குறித்தும் பேசினார்.
கருத்தரங்கில் வெளிநாட்டு மாணவர்கள், தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லுாரியிலிருந்தும், துறை மாணவர்களும் பங்கேற்று பல கணனி அறிவியல் துறை சார்பில் விளக்கம் அளித்து பேசினர்.
மாணவர்கள் விளக்கத்திற்கு ஏற்ப நடுவர்கள் கருணாநிதி சரவணன் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். கல்லுாரி முதல்வர் சங்கர், துணை முதல்வர் ஜெகன், துறை தலைவர்கள் லட்சுமி தேவி, கணேஷ், ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் மோனிஷா, மோகன பிரியா மற்றும் பல்வேறு கல்லுாரி மாணவர்கள் துறை மாணவர்கள் பங்கேற்றனர்.
