sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தமிழகத்தில் ஆர்.டி.இ., திட்ட மாணவர் சேர்க்கை கைவிடப்படுகிறதா

/

தமிழகத்தில் ஆர்.டி.இ., திட்ட மாணவர் சேர்க்கை கைவிடப்படுகிறதா

தமிழகத்தில் ஆர்.டி.இ., திட்ட மாணவர் சேர்க்கை கைவிடப்படுகிறதா

தமிழகத்தில் ஆர்.டி.இ., திட்ட மாணவர் சேர்க்கை கைவிடப்படுகிறதா


UPDATED : ஜூன் 29, 2025 12:00 AM

ADDED : ஜூன் 29, 2025 01:33 PM

Google News

UPDATED : ஜூன் 29, 2025 12:00 AM ADDED : ஜூன் 29, 2025 01:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
தமிழகத்தில் மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் (ஆர்.டி.இ.,) படிக்கும் மாணவர்களுக்கான ஆன்லைன் வருகை பதிவு நிறுத்தப்பட்டதால், தனியார் பள்ளிகளில் படிக்கும் 4.5 லட்சம் ஏழை மாணவர்கள் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

இத்திட்டம் 2013- 2014 கல்வியாண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இதன்படி தனியார் பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில் (எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பு) 25 சதவீதம் இடங்களில் ஏழை மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்பட்டனர். இவர்கள் அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை 10 ஆண்டுகள் படிப்பதற்கான கட்டணத்தை மத்திய அரசின் நிதியை பெற்று மாநில அரசுகள் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கும்.

இத்திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 8500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 75 ஆயிரம் மாணவர்கள் வரை சேர்க்கப்படுகின்றனர். தற்போது வரை 4.5 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். நடப்பு கல்வியாண்டில் இத்திட்டத்திற்கான மாணவர் சேர்க்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே இத்திட்ட மாணவர்களுக்கு 2 ஆண்டுகளாக 'எமிஸ்'ல் ஆன்லைனில் வருகை பதிவு நடத்தப்பட்டது. இது ஜூன் 26 முதல் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதி வரவில்லை என தமிழக அரசு தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், இத்திட்டம் தமிழகத்தில் கைவிடப்பட்டுள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. இதனால் இத்திட்டத்தில் படிக்கும் 4.5 லட்சம் மாணவர்கள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

இதுகுறித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு (பெப்சா) மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது:


இத்திட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு இரண்டு கல்வியாண்டிற்கான ஆர்.டி.இ., மாணவர்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு வழங்கவில்லை. இத்திட்டத்திற்கான கட்டணம் ஆண்டிற்கு ரூ.200 முதல் 250 கோடி வரை ஒதுக்கினால் போதுமானது. மத்திய அரசும் விரைவில் அதன் பங்களிப்பை வழங்க வேண்டும்.

இத்திட்டம் நிறுத்தப்பட்டால் யு.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் 4.5 லட்சம் மாணவர்கள் பாதிப்படைவர். அரசு கட்டணம் வழங்கவில்லையென்றால் கட்டணம் செலுத்த வசதி இல்லாதவர்கள் படிப்பை நிறுத்துவர்.

இம்மாணவர்களுக்கான ஆன்லைன் வருகை பதிவை நிறுத்தியதன் மூலம் இத்திட்டத்தை தமிழக அரசு நிறுத்திவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு முடிவு எடுத்தால் இனிவரும் கல்வியாண்டுகளில் அந்த மாணவர்களிடம் கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us