UPDATED : ஏப் 13, 2026 06:54 PM
ADDED : ஏப் 13, 2026 06:55 PM
திருப்பூர்:
திருப்பூர், முதலிபாளையம் நிப்ட் - டீ பேஷன் கல்லூரியில், இறுதியாண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. கல்லூரி துறை தலைவர் சம்பத், கல்லூரி முதல்வர் ராதாமணி, மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னலாடை உற்பத்தி, ஐ.டி., நிறுவனங்கள், 30 நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, நேர்முகத் தேர்வு நடத்தினர். பல்வேறு பிரிவுகளில் பணிபுரிவதற்காக, தேர்வு நடைபெற்றது. இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டில், மொத்தம் 305 மாணவர்களில், 220 பேர் நேர்முகத்தேர்வில் பங்கேற்றனர்.
'நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, அந்தந்த நிறுவனங்களில் இரண்டாம் கட்ட தேர்வு நடத்தப்பட்டு, பணியில் இணைவதற்கான நியமன ஆணை வழங்கப்படும்; மாணவர்களின் தகுதிக்கு ஏற்ப, ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்,' என கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
