டி.என்.பி.எஸ்.சி தேர்வு இலவச பயிற்சி : இந்து ஆதிதிராவிடர்களுக்கு அழைப்பு
டி.என்.பி.எஸ்.சி தேர்வு இலவச பயிற்சி : இந்து ஆதிதிராவிடர்களுக்கு அழைப்பு
UPDATED : ஜூன் 24, 2011 12:00 AM
ADDED : ஜூன் 24, 2011 10:04 AM
டி.என்.பி.எஸ்.சி குரூப் - 2 தேர்வு இலவச பயிற்சிக்கு இந்து ஆதிதிராவிட, பழங்குடியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி குரூப் - 2 தேர்வு தொடர்பாக விண்ணப்பங்களை அளிக்க ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மனுதாரர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
தற்போது 2,366 பணிக் காலியிடங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், குரூப்-2 தொடர்பான இலவச பயிற்சி வகுப்புகள் பாளை பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளோதோர் பள்ளியில் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடந்து வருகிறது.
இந்த வாய்ப்பினை இந்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் உட்பட அனைத்து பிரிவு மனுதாரர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இப்பயிற்சி தொடர்பான விபரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் (வேலைவாய்ப்பு) ஜான் பிலிப்போஸ் தெரிவித்தார்.
