UPDATED : ஜூலை 19, 2011 12:00 AM
ADDED : ஜூலை 19, 2011 10:20 AM
ஸ்ரீரங்கம்-திருச்சி மாவட்டம், நெம்மேலி-காஞ்சிபுரம் மாவட்டம், நாகலாபுரம்-தூத்துக்குடி மாவட்டம், அரூர்-தருமபுரி மாவட்டம், கள்ளக்குறிக்சி-விழுப்புரம் மாவட்ம், சாத்தூர்-விருதுநகர் மாவட்டம், வேதாரண்யம்-நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பத்தூர்-வேலூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி-திருவாரூர் ஆகிய ஒன்பது இடங்களில் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
மேலும், பாப்பிரெட்டிப்பட்டி-தருமபுரி மாவட்டம், நன்னிலம்-திருவாரூர் மாவட்டம் ஆகிய இரண்டு இடங்களிலும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
புதிதாக துவக்கப்பட்ட கல்லூரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை துவங்கி நடைபெறுகிறது.
கல்லூரிகள் துவக்கப்பட்டப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இதனால் பெரிதும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
