UPDATED : ஜூலை 28, 2011 12:00 AM
ADDED : ஜூலை 28, 2011 10:48 AM
இந்த கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவ சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2010 ஆசிரியர் பயிற்சி இடங்கள் உள்ளன. இவற்றிற்கான கலந்தாய்வில் பங்கேற்க ஆகஸ்ட் 4ம் தேதி முதல் 13ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகிறது. அனைத்து ஆசிரியர் பயிற்சி மையங்களிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட மாட்டாது. குறிப்பிட்ட 15 மையங்களில் மட்டுமே விண்ணப்ப விநியோகம் நடைபெற உள்ளது.
விண்ணப்பக் கட்டணம் ரூ.300. எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு 175 மட்டுமே.
ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் இருந்து கலந்தாய்வு துவங்குகிறது. இரண்டு கட்டங்களாக கலந்தாயவு நடைபெறும். மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும்.
