சமச்சீர் கல்வி வழக்கு விசாரணை ஆக., 2ம் தேதி தொடரும்
சமச்சீர் கல்வி வழக்கு விசாரணை ஆக., 2ம் தேதி தொடரும்
UPDATED : ஜூலை 28, 2011 12:00 AM
ADDED : ஜூலை 28, 2011 05:02 PM
அ நிறம் | அளவு
சமச்சீர் கல்வி புத்தகங்களை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்க உயர் நீதிமன்றம் அளித்த கால அவகாசம் போதாது என்று தமிழக அரசு குறிப்பிட்டிருந்ததால், ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் புத்தகங்களை அளிக்க உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்தது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், தமிழக அரசு மேலும் கால அவகாசம் கோரியது. இதனால், ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் புத்தகங்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்க உச்ச நீதிமன்றம் மேலும் கால அவகாசம் அளித்துள்ளது.
இதையடுத்து, கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை, ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
