UPDATED : ஜன 27, 2012 12:00 AM
ADDED : ஜன 27, 2012 10:43 AM
அ நிறம் | அளவு
கரூர்: கரூர் பரணி பார்க் பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில், 570 மாணவ, மாணவியர் ஒரே இடத்தில் அமர்ந்து, கீ போர்டு மூலம், தேச பக்திப் பாடலைப் பாடி, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் என்ற சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றனர்.
மேலும், 1,500 மாணவ, மாணவியர், தேசிய தலைவர்கள் வேடமிட்டு, குடியரசு தின விழாவுக்கு வந்தது, பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர் தேசியக் கொடியை கையில் ஏந்தி, வந்தே மாதரம் என, உணர்ச்சிப் பெருக்கில் கோஷமிட்டனர்.
இந்த சாதனை நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட கலெக்டர் ஷோபனா, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் நடுவர் மோகன்ராஜ் ஜோசி, பிரதிநிதி ஜெட்லி உட்பட பலர் பங்கேற்றனர்.
