sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நீட் தேர்வு: சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு

/

நீட் தேர்வு: சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு

நீட் தேர்வு: சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு

நீட் தேர்வு: சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு


UPDATED : ஆக 06, 2013 12:00 AM

ADDED : ஆக 06, 2013 07:56 AM

Google News

UPDATED : ஆக 06, 2013 12:00 AM ADDED : ஆக 06, 2013 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ பட்டப் படிப்புகளுக்கும், மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கும், "நீட்" எனப்படும், பொது நுழைவுத் தேர்வு நடத்தி, மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.

"இந்த முறையை ரத்து செய்ய வேண்டும்; அரசியல் அமைப்புச் சட்டப்படி, நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது" என கடந்த மாதம், 19ம் தேதி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அப்போதைய தலைமை நீதிபதி, அல்டமாஸ் கபீர் மற்றும் நீதிபதி விக்ரம்ஜித் சென் ஆகியோர், நுழைவுத் தேர்வு தேவையில்லை என, தீர்ப்பு வழங்கினர்.

பெஞ்சில் இடம் பெற்றிருந்த மற்றொரு நீதிபதியான, ஏ.ஆர்.தவே, மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். அதில், நுழைவுத் தேர்வு அவசியம் எனவும், "நீட்" தேர்வு முடிவை மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் போது, அவற்றை ரத்து செய்திருப்பது தவறு என்றும், அதில் குறிப்பிட்டிருந்தார்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து, மத்திய அரசே, மேல் முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், "சங்கல்ப்" என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று, சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.






      Dinamalar
      Follow us