sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பாடப்புத்தகங்கள் கிடைக்காததால் மாணவர்கள் பாதிப்பு

/

பாடப்புத்தகங்கள் கிடைக்காததால் மாணவர்கள் பாதிப்பு

பாடப்புத்தகங்கள் கிடைக்காததால் மாணவர்கள் பாதிப்பு

பாடப்புத்தகங்கள் கிடைக்காததால் மாணவர்கள் பாதிப்பு


UPDATED : ஆக 06, 2013 12:00 AM

ADDED : ஆக 06, 2013 10:33 AM

Google News

UPDATED : ஆக 06, 2013 12:00 AM ADDED : ஆக 06, 2013 10:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: கேரளாவில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், பாடப் புத்தகங்கள் வழங்காததால், மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் பள்ளிகள் ஆரம்பித்து, இரண்டு மாதங்கள் ஆகியும், தமிழ் மற்றும் மலையாள மொழி வழிக் கல்வி பெறும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து புத்தகங்களும் வழங்கப்படாமல் உள்ளன. இடுக்கி மாவட்டத்தில் தமிழ் வழி கல்வி பெறும் மாணவ, மாணவிகள் அதிகளவில் உள்ளனர்.

இவர்களுக்கு ஒரு சில புத்தகங்கள் இது வரை வழங்கப்படவில்லை. காலாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், புத்தகங்கள் இன்றி மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தேர்வை சந்திக்க வேண்டி உள்ளதால், புத்தகங்களை நகல் எடுத்து படிக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

புத்தகங்களின் பற்றாக்குறை குறித்து, ஆசிரியர்கள், உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. புத்தகங்கள் அச்சடிக்கும் அரசு நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடியால், காலதாமதம் ஏற்பட்டு வருவதாக கூறுகின்றனர். கல்வித் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், பொதுத் தேர்வை சந்திப்பதற்கு காத்திருக்கும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us