sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

"திறமை இருந்தால் வேலை நிச்சயம்"

/

"திறமை இருந்தால் வேலை நிச்சயம்"

"திறமை இருந்தால் வேலை நிச்சயம்"

"திறமை இருந்தால் வேலை நிச்சயம்"


UPDATED : ஆக 06, 2013 12:00 AM

ADDED : ஆக 06, 2013 11:08 AM

Google News

UPDATED : ஆக 06, 2013 12:00 AM ADDED : ஆக 06, 2013 11:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சி சிவானி இன்ஜினியரிங் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் பேசியதாவது:

"இந்தியாவில் 298 மாநில பல்கலைகள், 190 நிகர்நிலை பல்கலைகள் உள்ளன. இது தவிர 44 மத்திய பல்கலைகள் உள்ளன. தரமற்ற கல்வி முறை, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, சிறந்த ஆசிரியர்கள் இல்லாதது போன்ற காரணங்களால், இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இவற்றை சரி செய்தால், மாணவர் சேர்க்கை எண்ணிக்கை உயர்த்த முடியும்.

இன்ஜினியரிங் பயில்வது எளிமையாகும். முதல் ஆண்டு மட்டுமே கடினமாக இருக்கும். அதன் பிறகு எளிதாக படித்து முடிக்க முடியும். நாள்தோறும் இரண்டு மணி நேரம் முழு கவனத்தையும் செலுத்தி படித்தால் போதுமானதாகும்.

கல்லூரிகளில் பயிலும் போதே, திறன் மேம்பாடு போன்ற இதர தகுதிகளை வளர்க்க உதவும் பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். கல்லூரி படிப்பை முடித்த பிறகு இது சாத்தியமாகாது. எந்த தொழிற்சாலையும் படிப்புக்கு வேலை கொடுப்பது கிடையாது.

மாணவர்களிடம் இருக்கும் தனித் திறன் அடிப்படையிலேயே பணியில் சேர்க்கும் நிலை உள்ளது. மேலும், தலைமை பண்பு, தொடர்பியல் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டால் போதுமானது." இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us