தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரியில் மொபைல் போன்: மாணவர்களிடையே தகராறு

கல்லூரியில் மொபைல் போன்: மாணவர்களிடையே தகராறு

கல்லூரியில் மொபைல் போன்: மாணவர்களிடையே தகராறு


UPDATED : நவ 14, 2013 12:00 AM

ADDED : நவ 14, 2013 10:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2013 12:00 AM ADDED : நவ 14, 2013 10:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கல்லூரியில் மொபைல் போன் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மாணவனை சரமாரியாக வெட்டிய சக மாணவர் கைது செய்யப்பட்டார்.

கோவை, பீளமேடைச் சேர்ந்தவர் அசோக்குமார், 19; சரவணம்பட்டி பகுதியிலுள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அசோக்குமார் தன்னுடைய மொபைல் போன் ஒன்றை இவருடன் படிக்கும் தானேஷிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் வகுப்பறையில் மொபைல் போன் குறித்து இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். செய்முறை பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் கத்தி போன்ற பொருளால் தானேஷின் நெஞ்சுப் பகுதி, வயிறு, முதுகு உள்ளிட்ட இடங்களில் அசோக்குமார் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து தானேஷ் போலீசில் புகார் கொடுத்தார். வழக்கு பதிந்த போலீசார் அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us