UPDATED : ஆக 16, 2014 12:00 AM
ADDED : ஆக 16, 2014 11:29 AM
தேவிபட்டினம்: தேவிபட்டினம், ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், விதிகளை மீறி செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.
இப்பகுதிகளில் உள்ள மாணவர்களை வாடகை வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பெற்றோர் அனுப்புகின்றனர். வாகனங்களுக்குள் போட்டா போட்டி ஏற்பட்டு குழந்தைகளை அடைத்து வைத்து செல்கின்றனர்.
குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தில், பள்ளி வாகனம் என குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என பல விதிமுறைகள் உள்ளன.
ஆனால் தேவிபட்டினம், சோழந்தூர், ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், செட்டியமடை உள்ளிட்ட பகுதிகளில் வாடகை வாகனங்கள்தான் பள்ளி வாகனங்கள். இதனால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இந்த வாகனங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
