UPDATED : ஆக 22, 2014 12:00 AM
ADDED : ஆக 22, 2014 12:31 PM
இணையத்தால் எந்த அளவு நன்மையோ அதே அளவு தீமையும் இருக்கிறது. இன்று அனைத்து வயதினரும் இணையத்தை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.
வங்கி கணக்கு மற்றும் தகவல்கள் திருடல், பெண்களை ஆபாசமாக சி்த்தரித்தல் என பெரியவர்கள் மாட்டிக் கொள்கின்றனர். இணையத்தை பயன்படுத்தும் குழந்தைகளின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. இணையத்தை பயன்படுத்தும் இரண்டு குழந்தைகளில் ஒன்று சைபர் குற்றத்திற்கு ஆளாகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பெற்றோர் செய்ய வேண்டியது: தங்களது குழந்தைகளுடன் மனம் விட்டு உரையாட வேண்டும். இணையத்தில் எந்த லிங்குகளை பார்க்கிறார்கள் என கண்காணி்க்க வேண்டும். பாதுகாப்பு தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். அதை குழந்தைகளிடம் கூற வேண்டும்.
குழந்தைகள் செய்ய வேண்டியது
தங்களது எந்த ஒரு விவரத்தையும் இணையத்தில் தெரியாதவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது. இணையத்தில் மிரட்டப்படுவது தெரிந்தால், உடனே பெற்றோரிடம் கூற வேண்டும்.
