நெடிமோழியனூர் பள்ளியில் கிராம கல்விக் குழு கூட்டம்
நெடிமோழியனூர் பள்ளியில் கிராம கல்விக் குழு கூட்டம்
UPDATED : செப் 01, 2014 12:00 AM
ADDED : செப் 01, 2014 12:10 PM
அ நிறம் | அளவு
மயிலம்: மயிலம் அடுத்த நெடிமோழியனூர் பள்ளியில் கிராம கல்விக் குழு கூட்டம் நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு தலைமையாசிரியர் அருள்மொழிவர்மன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் உமா கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். உதவி ஆசிரியர் சுகுமார் வரவேற்றார். கிராம கல்விக்குழு தலைவர் பாலு சிறப்புரையாற்றினார். ஆசிரியர்கள் எட்வர்டுரமேஷ், அன்புசெல்வன், அரிகரன், தயாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
