அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கலவை சாதம் வழங்கும் திட்ட தொடக்க விழா
அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கலவை சாதம் வழங்கும் திட்ட தொடக்க விழா
UPDATED : செப் 03, 2014 12:00 AM
ADDED : செப் 03, 2014 11:11 AM
அ நிறம் | அளவு
கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றியம் திருமங்கலம் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு அரசின் கலவை சாதம் வழங்கும் திட்ட தொடக்க விழா நடந்தது.
ஒன்றிய சேர்மன் சர்மிளாதேவி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம்மாள், ஊராட்சி தலைவர் நிர்மலா ஜெயக்கண்ணன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி துணைத் தலைவர் சகுந்தலா ராஜாராம் வரவேற்றார்.
வானூர் தொகுதி எம்.எல்.ஏ., ஜானகிராமன் குழந்தைகளுக்கு கலவை சாதம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து பேசினார். பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், அன்பழகன், சிறுவந்தாடு கூட்டுறவு வங்கி தலைவர் நெடுஞ்செழியன், ஒன்றிய கவுன்சிலர்கள் கவுரிபாலக்கிருஷ்ணன், விஜயன் வாழ்த்துரை வழங்கினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
