உதவிப் பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வின் மதிப்பெண் முடிவுகள்
உதவிப் பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வின் மதிப்பெண் முடிவுகள்
UPDATED : செப் 04, 2014 12:00 AM
ADDED : செப் 04, 2014 12:58 PM
சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்பட்ட, நேர்முகத் தேர்வின் மதிப்பெண் முடிவுகள் வெளியிடப்பட்டன.
தமிழக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இவற்றை நிரப்ப ஆசிரியர் தேர்வாணையம், பல்வேறு கட்ட தேர்வுகள் நடத்தியது. இதற்கு, 14,500க்கும் மேற்பட்டோர் விண்ணபப்பித்த நிலையில், அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
பின், ஆக., 25 28 ம் தேதிகளில், ஒரு பணிக்கு ஐந்து பேர் என்ற விகிதத்தில் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இதில் அவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண் பட்டியல், நேற்று ஆசிரியர் தேர்வாணையத்தின் இணைய தளமான, www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
