மாணவர்கள் 11 பேருக்கு அரசு சார்பில் தலா ரூ.50,000 கல்வி ஊக்கத்தொகை
மாணவர்கள் 11 பேருக்கு அரசு சார்பில் தலா ரூ.50,000 கல்வி ஊக்கத்தொகை
UPDATED : செப் 05, 2014 12:00 AM
ADDED : செப் 05, 2014 11:01 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: மாவட்டத்தில் துவக்கக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் 11 பேருக்கு, அரசு சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
துவக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் பெற்றோர் இறந்துவிடும் பட்சத்தில் அல்லது வருமானம் ஈட்டமுடியாத நிலை உருவானால், அந்த குழந்தையின் படிப்பை ஊக்கப் படுத்த மாநில தொடக்க கல்வித்துறை மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்படி, மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 11 மாணவ, மாணவிகளின் படிப்பு உதவிக்காக தலா 50 ஆயிரம் ரூபாய் டிபாசிட் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், டி.இ.இ.ஓ., சுவாமிநாதன் (பொறுப்பு) மாணவர்களிடம் காசோலையை வழங்கினார்.
