sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தகுதியான ஆசிரியர்களை உருவாக்க முதற்கட்டமாக 1000 பேருக்கு பயிற்சி: யு.ஜி.சி. துணைத்தலைவர்

/

தகுதியான ஆசிரியர்களை உருவாக்க முதற்கட்டமாக 1000 பேருக்கு பயிற்சி: யு.ஜி.சி. துணைத்தலைவர்

தகுதியான ஆசிரியர்களை உருவாக்க முதற்கட்டமாக 1000 பேருக்கு பயிற்சி: யு.ஜி.சி. துணைத்தலைவர்

தகுதியான ஆசிரியர்களை உருவாக்க முதற்கட்டமாக 1000 பேருக்கு பயிற்சி: யு.ஜி.சி. துணைத்தலைவர்


UPDATED : நவ 02, 2014 12:00 AM

ADDED : நவ 02, 2014 11:57 AM

Google News

UPDATED : நவ 02, 2014 12:00 AM ADDED : நவ 02, 2014 11:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தேவராஜ் கூறியதாவது: நாடு முழுவதும், 41 நிகர்நிலை பல்கலைகள் மீண்டும் ஆய்வு செய்யப்படுகிறது. அப்பல்கலைகளில், தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்பதுதான் பிரச்னை. இதற்காகத்தான், தகுதிவாய்ந்த ஆசிரியர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தகுதியான ஆசிரியர்களை உருவாக்கும் புதிய திட்டம் என்ன?

ஆசிரியர்கள் தகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 12வது ஐந்தாண்டு திட்டத்தில், 1,000 தகுதியான ஆசிரியர்களை தேர்வுசெய்ய, ஆந்திர மாநிலம், காக்கி நாடாவில், பல்கலை ஆசிரியர் கல்வி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, முதற்கட்டமாக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மனிதவள மேம்பாட்டுத்துறை, 5,000 ஆசிரியர்களை உருவாக்குகிறது. பல்கலைகள், யு.ஜி.சி.,யிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஆசிரியர்களை கேட்டால், நாங்கள் அளிப்போம். அவர்களுக்கான சம்பளம் முழுவதையும், யு.ஜி.சி.,யே அளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கல்வி மையங்கள் மூடப்படும்!

பல்கலைகள் தொலைதூரக் கல்வி பெயரில், ஆங்காங்கே அமைக்கும் கல்வி மையங்களுக்கு, யு.ஜி.சி., கடிவாளம் போட்டுள்ளது.
இதுகுறித்து, அதன் துணைத் தலைவர் தேவராஜ் கூறியதாவது: மாநில அரசின் சட்ட அடிப்படையில், தொலைதூரக் கல்வி நிறுவனங்கள், மாநிலத்திற்குள் மட்டுமே செயல்பட முடியும். பார்லி., அனுமதி பெற்றிருந்தால், நாடு முழுவதும் கல்வி மையங்கள் அமைக்கலாம்.

நிகர்நிலை பல்கலைகள், தொலைதூரக் கல்வி மையங்களை துவக்க முடியாது. அனுமதியின்றி துவக்கினால், நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களும் குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே செயல்பட முடியும். கல்வி மையங்கள் பெயரில் தப்பு நடப்பதை, தடுத்து நிறுத்தி, அவற்றை மூட வேண்டும். நாங்கள், தொலைதூரக் கல்விக்கு எதிரானவர்கள் இல்லை. ஆன்-லைன் படிப்புகளை, அதிகளவில் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் முடிவு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us