sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

"பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது"

/

"பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது"

"பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது"

"பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது"


UPDATED : நவ 05, 2014 12:00 AM

ADDED : நவ 05, 2014 11:49 AM

Google News

UPDATED : நவ 05, 2014 12:00 AM ADDED : நவ 05, 2014 11:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: இந்திய தொழில் கூட்டமைப்பு, எம்ப்ளாயபிலிடி பிரிட்ஜ் நிறுவனம் சார்பில் தென்மாநில பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., கல்லூரியில் நடந்தது.

தமிழகம், கேரள மாநிலங்களில் உள்ள 47 கல்லூரிகளை சேர்ந்த 950 மாணவர்கள் பங்கேற்றனர். 126 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. எம்ப்ளாயபிலிடி பிரிட்ஜ் நிறுவன முதன்மை செயல் அலுவலர் இமானுவேல் ஜஸ்டஸ் கூறியதாவது: பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. பொறியியல் துறை நிறுவனங்கள் பெரிய நகரங்களில் உள்ள கல்லூரிகளில் தேர்வு நடத்தி பணியாளர்களை தேர்வு செய்கின்றனர். இதனால் சிறிய நகரங்களில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில், சிறிய நகரங்களிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறோம்.

இதனால் நிறுவனங்களுக்கும் ஒரே இடத்தில் பணியாளர்கள் கிடைக்கின்றனர். முகாம் நடத்துவதற்கு முன்பாகவே நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி, அவர்களை தயார்படுத்துகிறோம். இதனால் அவர்கள் எளிதில் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us