sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

‘ஐ.டி., துறையால் ஆண்டுக்கு 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்’

/

‘ஐ.டி., துறையால் ஆண்டுக்கு 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்’

‘ஐ.டி., துறையால் ஆண்டுக்கு 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்’

‘ஐ.டி., துறையால் ஆண்டுக்கு 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்’


UPDATED : நவ 14, 2014 12:00 AM

ADDED : நவ 14, 2014 11:21 AM

Google News

UPDATED : நவ 14, 2014 12:00 AM ADDED : நவ 14, 2014 11:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு புறநகர் பகுதியில், சர்வதேச பொருட்காட்சி மையத்தில் நடந்த மூன்று நாள், ’பெங்களூரு ஐ.டி.,பிஸ்’ நிகழ்ச்சியை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்து பேசியதாவது:

ஆண்டுதோறும், தகவல் தொழில்நுட்ப முதலீடு பிரிவில், 40 மில்லியன் அளவு தொழில் நடக்கும். இதனால், நேரடியாகவும், மறைமுகமாகவும், 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தகவல் தொழில் நுட்ப பிரிவுக்கு, மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். 2 மற்றும் 3ம் பிரிவிலுள்ள நகரங்களில், தகவல் தொழில்நுட்ப பிரிவில் முதலீடு செய்ய முன்வரும் தொழிலதிபர்களுக்கு, தேவையான, அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

கர்நாடகாவில், தகவல் தொழில்நுட்ப பிரிவின் அபிவிருத்திக்கு ஏற்ற சூழ்நிலை உருவாக்கப்படும். ஐ.டி., - பி.டி., கம்பெனிகள், தங்கள் கம்பெனிகளை விரிவுபடுத்தி கொள்ள வசதியாக, அவர்களுக்கு, அனைத்து விதமான சலுகைகளும் வழங்கப்படும். நாட்டின் தகவல் தொ ழில்நுட்ப ஏற்றுமதியில், 30 சதவீதம் அளவு கர்நாடகாவின் பங்காக உள்ளது. பெங்களூரு, அமெரிக்க நகரங்களுடன் போட்டியிட தயாராகிறது. இவ்வாறு, சித்தராமையா பேசினார்.

தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் பேசுகையில், ”ஐ.டி., பி.டி., அபிவிருத்திக்காக, மாநில அரசு, பெரும்பாலான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. 2 மற்றும் 3வது பிரிவிலுள்ள நகரங்களில், முதலீடு செய்ய முன்வந்தால், முதலீட்டாளர்களுக்கு, இலவச நிலம், 2 ஆண்டு வரை, ஊழியர்களுக்கு எதிர்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ., வசதி ஏற்படுத்தி தரப்படும்,” என்றார்.

ஐ.டி., - பி.டி., துறை செயலர் ஸ்ரீவத்ச கிருஷ்ணா பேசுகையில், ‘தமிழகம், தெலுங்கா னா மாநிலங்களுடன் ஒப்பிட்டால், பெங்களூருவில், அதிகமான வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.






      Dinamalar
      Follow us